ஹைகோப் வழக்குகளிலிருந்து தனுன திலஹரத்ன விடுதலை

ஹைகோப் வழக்குகளில் இருந்து தனுன திலஹரத்ன விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இந்த உத்தரவு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று பிறப்பித்துள்ளது.

சரத் பொன்சேகாவின் மகளது முன்னாள் கணவரான இவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வருடம் டிசம்பர் மாதம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

பின்னர் பிணை வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இராணுவத்தில் ஆயுதக் கொள்வனவு செய்த போது நிதி மோசடி இடம்பெற்றதாகக் கூறி சரத் பொன்சேகா மற்றும் தனுனவுக்கு எதிராக ஹைகோப் நிதி மோசடி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இருந்து 2012 மார்ச் 15ம்திகதி பொன்சேகா விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.