பொலிஸ் வரலாற்றை புதிப்பித்த இமேஷா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக எஸ்எஸ்பி இமேஷா முத்துமல நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக பதவி ஏற்பது இது முதல்முறையாகும்.