துமிந்தவின் விடுதலையும் வலுக்கும் சர்வதேச எதிர்ப்புகளும்

துமிந்தவின் விடுதலையும் வலுக்கும் சர்வதேச எதிர்ப்புகளும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டமைக்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை இலங்கையின் சட்டத்தின் ஆட்சியை அலட்சியம் செய்யும் விதத்தில் அமைந்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார்.

எதேச்சாதிகாரமாக வழங்கப்படும் பொது மன்னிப்புக்கள் சட்டம் ஒழுங்கை மலினப்படுத்துவதுடன், குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதலை பலவீனப்படுத்தும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.