முஸ்லிம் பள்ளிவாயிலில் நடைபெற்ற மோதலில் 14 பேர் கைது

புத்தளம் , முஸ்லிம் பள்ளிவாயிலில் நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று(19) இந்தச் சம்பவம் நடைபெற்றதாக முந்தளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பள்ளிவாயலில் சேர்ந்த நன்கொடைகளை பகிர்ந்தளிப்பது தொடர்பாக இருதரப்பினருக்கிடையில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாகவே குறித்த மோதல் ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.

இவர்களின் மோதலை சமரசப்படுத்த முயற்சித்த மற்றொரு குழுவினர் மீதும் ஒரு குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.