மாணவர்களுக்கு நாளை முதல் ‘பைஸர்’

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாளை (22) முதல் 16 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும், கொரோனா தடுப்பூசி போடத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜெனரல் அசேல குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கு, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்திருந்தார்.