ஜக்ஷன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்

பிரபல கலைஞர் ஜக்ஷன் அன்டனி பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக சென்றுள்ளார்.

ஹம்பந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ துறைமுக திறப்புவிழாவின் போது, அங்கு இடம்பெற்ற நடன நிகழ்வில் 15 மில்லியன் ரூபாய் நிதி மோசடி இடம்பெற்றமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கே, இவர் வரவழைக்கப்பட்டுள்ளார்.