‘கெசல்வத்த ஃபவாஸ்’ கொலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ‘கெசல்வத்த ஃபவாஸ்’ என்ற நபர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (04) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கெசல்வத்த பழைய யோர்க் வீதியில் காரில் வந்த குழுவொன்று குறித்த நபரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.