வெளிநாட்டு பணக்கட்டுக்களுடன் சிக்கிய நபர்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை முறையின் ஊடாக வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக 50,000 யூரோவை வைத்திருந்த நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் பெபிலியான பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை 47,000 அமெரிக்க டொலருடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.