8 ஆயிரம் சிலிண்டர்களே விநியோகிக்கப்படும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

சீரற்ற வானிநிலை காரணமாக கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ள கப்பலில் இருந்து எரிவாயு இறக்கும் பணி தடைபட்டுள்ளதாகவும், நாளொன்றுக்கு 8,000 எரிவாயு சிலிண்டர்கள் மட்டுமே விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீரற்ற வானிலையால் எரிவாயுவை தரையிறக்கும் பணி மெதுவாக இடம்பெறுவதனாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு 80,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என பிரதமர் அலுவலகம் முதலில் அறிவித்திருந்தாலும், வானிலை சீராகும் வரை 8,000 சிலிண்டர்கள் மட்டுமே தற்போது சந்தைக்கு விநியோகிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.