விலையை அதிகரித்த பிரீமா!

(ஃபாஸ்ட நியூஸ் | கொழும்பு) –

கோதுமை மாவின் விலை உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுவதாக பிரீமா நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, கோதுமைமா கிலோ ஒன்றின் விலையை 40 ரூபாவால் அதிகரித்துள்ளதாக பிரீமா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
  அதேவேளை கோதுமைமா விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த வாரம் முதல் சகல பேக்கரிகளும் உணவு உற்பத்திகளும் நிறுத்தப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.