(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
இளம் இராணுவ வீரர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
வெள்ளவத்தை பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றது.
22 வயதான இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாகவும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் தகவல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் இல்லத்தின் பாதுகாப்பிற்காக பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவ சிப்பாயே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.