(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
எதிர்வரும் திங்கட்கிழமை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய பிராந்திய அலுவலகங்கள் வழமை போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் , அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் திணைக்கள அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் கூறியுள்ளது.