(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
நாட்டில் தனியார் பேருந்து சேவைகள் இன்று முதல் 90% வரை குறைக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது டீசல் தட்டுப்பாடு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு மேலும் அதிகரித்தால் பஸ் சேவை முற்றாக ஸ்தம்பிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.