(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
பௌத்தர்களின் பொறுமையை சோதிக்க வேண்டாமென தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, இன்று பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும் போதே அமைச்சர் சரத் வீரசேகர இதனை தெரிவித்தார்.
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் புத்தர் சிலையை முன்வைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி மற்றும் அதனை தடுத்து நிறுத்தியமை தொடர்பில் விளக்கமளித்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் சரத் வீரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.