மத்திய வங்கியின் ஆளுனர் பதவி தொடர்பில் ஜனாதிபதி முக்கிய முடிவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இலங்கை மத்திய வங்கியின் ஆளுனராக கலாநிதி நந்தலால் வீரசிங்கவே தொடர்ந்தும் பதவி வகிப்பார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் அவர் இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநராக நந்தலால் வீரசிங்கவை நீடிக்குமாறு அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.