எரிபொருள் இறக்குமதி குறித்து ஆராய அமைச்சர்கள் நாளை ரஷ்யா செல்கின்றனர்,

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

எரிபொருள் இறக்குமதிக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய இரண்டு அமைச்சர்கள் நாளை ரஷ்யாவுக்குப் பயணிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாளை முதல் ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் எரிபொருளை விநியோகிப்பதற்கான டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்படும் எனவும் விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

மேலும், அடுத்த எரிபொருள் இறக்குமதிக்கான சரியான திகதியை கூற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்