(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
ஆபத்தான நிலையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலித் தகவல்கள் வெளியாகி உள்ளதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மகிந்த ராஜபக்ஷவின் முன்னாள் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் காசிநாதன் கீத்நாத் தனது ருவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
Reports claiming that former President @PresRajapaksa is in hospital is FALSE. Please verify before sharing #FakeNews.
— G. Cassilingham (@CassilingamG) June 30, 2022
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று காலை அவசர சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியிருந்தன.
மகிந்த ராஜபக்ஷ தற்போது வைத்தியசாலையில் விசேட பிரமுகர் அறையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.