நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்; ஆனால் ஒன்றரை வருடங்கள் ஆகும்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப தன்னால் முடியும் எனவும் அதில் தான் வலுவான நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அல்ஜசீரா அலைவரிசையுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருக்கும் , நாட்டின் பொருளாதாரம் நிலையான, ஸ்திர நிலைக்கு திரும்ப இன்னும் 18 மாதங்கள் ஆகும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.