மறு அறிவித்தல் வரை கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் ஏழு பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு, களனி, நுகேகொடை, கல்கிசை, கொழும்பு வடக்கு, கொழும்பு மத்திய மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கானது இன்று இரவு ஒன்பது மணி முதல் மறு அறிவித்தல் வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.