கொலை குற்றங்களுக்கு இனியும் இடமளிக்கக்கூடாது :சஜித் பிரேமதாச

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இலங்கையில் அண்மைக்காலமாக அதிகளவான கொலைச் சம்பவங்கள் பதிவாகி வருவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர்,

இதுபோன்ற குற்றச் செயற்பாடுகளுக்கு இடமளிக்கக்கூடாது. மேலும் சர்வகட்சி அரசாங்கத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர்களை பேரம்பேசுவது நாட்டுக்கு தேவையற்ற விடயம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும் ஒன்றுப்பட்டு நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டும். நாடு சரியான பாதையில் செல்வதற்கு ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.