15 நிமிடங்களுக்குள் வெளியேறுங்கள் : போராட்டக்காரர்களுக்கு மீண்டும் அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

சில நிமிடங்களுக்கு முன்னர், காலிமுகத்திடல் பகுதியில் தங்கியிருந்த மட்டுப்படுத்தப்பட்ட செயற்பாட்டாளர்களை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

15 நிமிடங்களில் தங்களுடைய கூடாரங்களை அகற்றிவிட்டு இடத்தை காலி செய்யும்படி கூறப்பட்டது.

பொலிஸாரின் அறிவித்தலின் பிரகாரம், அந்தக் குழுவினர் கூடாரங்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் .

இதேவேளை காலிமுகத்திடல் போராட்ட களம் அமைந்துள்ள பகுதிக்கு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.