எவன்-கார்ட் சர்ச்சை தொடர்பாக விஷேட அமைச்சரவை கூட்டம் ஒன்று இன்று(09) இடம்பெற இருப்பதாக அரச வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
எவன்-கார்ட் சர்ச்சை தொடர்பாக பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியற்ற நிலைமையை அடுத்து அரசாங்கம் இது குறித்த தொடர்பில் கூடிய கவனம் செலுத்தியுள்ளது.
இன்னும், அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, எவன்-கார்ட் சர்ச்சை தொடர்பாக விஷேட அமைச்சரவை கூட்டம் ஒன்று இன்று இடம்பெற இருப்பதாக அறிவித்திருந்தார்.
மேலும், இன்று முற்பகல் இந்த விஷேட கூட்டம் இடம்பெற இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.