33 வயதாகின்ற அனுஷ்காவுக்கு வெகு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தெலுங்கு இணையத் தளங்கள் பரபரப்பு செய்தியினை வெளியிட்டுள்ளது.
2005–ல் சினிமாவில் நடிக்க வந்த அனுஷ்கா கிட்டத்தட்ட பத்து வருடங்களாக தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ள ‘ருத்ரமாதேவி’, ‘பாகுபலி’ ஆகிய இரு சரித்திர படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன.
பெற்றோர்களின் தொடர் நிர்ப்பந்தத்தால் தற்போது அனுஷ்காவிடம் மனமாற்றம் ஏற்பட்டுள்ளதுடன் திருமணத்துக்கு சம்மதம் சொல்லி விட்டாராம். இதனால் குடும்பத்தினர் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது. ஏற்கெனவே பார்த்த மாப்பிள்ளைகளில் ஒருவரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் விரைவில் அனுஷ்காவுக்கு திருமணம் நடக்க உள்ளது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளார். நடிப்பதற்கு தடை போடாத மாப்பிள்ளைக்கே தலையை நீட்டுவாராம்.