(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
ஒவ்வொருவருக்கும் சமுர்த்தியை வழங்குவதற்கு பணமில்லை, ஆனால் சமுர்த்தியை பெறுவதற்கு தகுதியற்றவர்களை நீக்கினால் தகுதியுள்ளவர்களுக்கு வழங்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (01) நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“நாம் பொருளாதாரத்தையும் சமூகத்தையும் கட்டியெழுப்ப வேண்டும். எடுக்கப்படும் முடிவுகள் பிரபலமாக இல்லாமல் போகலாம். ஆனால் அந்தப் பணியை நாடாளுமன்றம் மேற்கொள்ள வேண்டும்.” எனத் தெரிவித்திருந்தார்.