ரயிலில் இடறி வீழ்ந்து பல்கலை மாணவன் பலி

கொழும்பு நோக்கி பயணித்த அதி விரைவு ரயில் ஒன்றில் இடறி வீழ்ந்து பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (16) இடம்பெற்ற இவ்விபத்தில், வெலிவேரிய, எம்பரலுவ தெற்கில் வசிக்கும் பதிரணகே தொன் ஆசிரி எனும் களனி பல்கலைக்கழக கல்வி கற்கும் 22 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த ரயிலில் வீழ்ந்த இம்மாணவனை அந்த ரயிலிலேயே கனேமுல்ல ரயில் நிலையத்தை நோக்கி கொண்டு செல்கையில் மரணித்ததாக தெரியவந்துள்ளது.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.