முல்லைத்தீவில் பட்டதாரி இளைஞனின் விபரீத முடிவு!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
முல்லைத்தீவில் பட்டதாரி இளைஞன் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயர சம்பவம், நேற்றைய தினம் (18) இடம்பெற்றறுள்ளதாக தெரியவருகின்றது.

சம்பவத்தில் முல்லைத்தீவு – குமுளமுனை பகுதியில் வசிக்கும் சதாசிவம் முரளிதரன் என்ற 28 வயது பட்டதாரி இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2022 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.