பிக்குவுக்கும் ஆசை இருந்திருக்கிறது.
பிக்குவாக வர ஆசைப்பட்டதில் இருந்து.
நித்தியானந்தாவைப் போல..
அது ஒருபக்கம் இருக்கட்டும்..
அந்த பெண்களின் ஆடைகளை அணியவிடாமல் தடுத்த காட்டுமிராண்டித்தனம் பண்ணுகிறார்களே..
உண்மையில் இவர்கள் மனிதர்கள் தானா?
அந்த பெண்களின் வயதையொத்த இவர்களது அக்காவோ , தங்கையோ இப்படியொரு சம்பவத்தில் சிக்கியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று சிந்திப்பார்களா இந்த மிருகங்கள்..?
இவற்றையெல்லாம்விட அந்த வீடியோவை அப்படியே பச்சையாக சமூக ஊடகங்களில் பகிர்ந்து மனதுக்குள் மகிழ்ந்தவர்களை என்ன செய்வது?
உங்களில் யோக்கியர்கள் முதல் கல்லை வீசுங்கள்.. அதற்கு வாய்ப்பேயில்லை.
இந்த நாடு உருப்படும் நாள் என்றும் வரப்போவதில்லை…!
Siva Ramasamy