60 வயது பெண்ணை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர்..!

60 வயதுடைய பெண்ணொருவரை பொலிஸ் உத்தியோகத்தர் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் றம்புக்கன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்த பொலிஸார்

அத்தோடு அப் பொலிஸ் உத்தியோகத்தரை வீட்டிலிருந்தவர்கள் கட்டி வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தையடுத்து குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாக றம்புக்கன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் றம்புக்கன பொலிஸ் பிரிவில் கடமையிலிருந்த பொலிஸ் சர்ஜன்ட் என தெரிவிக்கப்பட்டுள்ளது.