சசித்ர சேனாநாயக்கவுக்கு வெளிநாடு செல்ல தடை..!

சசித்ர சேனாநாயக்கவுக்கு வெளிநாடு செல்ல தடை..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கை கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்க வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

போட்டி மோசடி சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்பான உண்மைகளை நீதிமன்றில் அறிக்கை செய்ததன் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று மாத காலத்திற்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.