ஜனாதிபதியை சந்தித்த தாய்லாந்து உப பிரதமர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், தாய்லாந்து உப பிரதமர் Wissanu Krea-ngam ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று மாலை இடம்பெற்றது.

இதன்போது தாய்லாந்து உப பிரதமரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிக நட்பு ரீதியில் வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து, இரு நாட்டு உறவுகளையும் பலப்படுத்தும் வகையிலான சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளது.