தமயந்தி ஜயரத்ன ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரத்ன இன்று பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்திற்கு இராணுவத்தினரால் வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை எவன்கார்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற்று கொள்வதற்காகவே அவர் இவ்வாறு அழைப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் எவன்கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி நாளைய தினம் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.