அமைச்சர் ரொஷானின் இலங்கை கிரிக்கட் இடைக்கால குழு தீர்மானத்தை இடைநிறுத்தியது நீதிமன்றம்..!

அமைச்சர் ரொஷானின் இலங்கை கிரிக்கட் இடைக்கால குழு தீர்மானத்தை இடைநிறுத்தியது நீதிமன்றம்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கட் இடைக்கால குழுவின் செயற்பாடுகளை 14 நாட்களுக்கு இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேபோல் விளையாட்டு அமைச்சர் நியமித்த குழு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது .

இதேவேளை சற்றுமுன் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இ நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பிரஸ்தாபித்ததுடன் இ கிரிக்கெட் விளையாட்டிலிருந்து அரசியல் ஒழிக்கப்படவேண்டுமென கூறினார்.