வடமத்திய மாகாண பாடசாலைகளும் நாளை திறப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளும் நாளை (21) முதல் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலவும் மோசமான வானிலை காரணமாக இன்று(20) பாடசாலைகளை மூடுவதற்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ. சமரகோன் நேற்று (19) தீர்மானித்திருந்தார்.
எனினும் நாளை (21) முதல் வழக்கம் போல் வடமத்திய மாகாண பாடசாலைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.