(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பேரீத்தம் பழத்தின் மீதான விசேட பண்ட வரியைக் குறைத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பேரீத்தம் பழத்தின் மீதான தற்போதைய விசேட பண்ட வரியான 200 ரூபாவை 2025 மார்ச் 31 வரை கிலோவிற்கு ஒரு ரூபாவாக ஆகக் குறைத்து குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.