இந்த ஆண்டுக்கான பல்லான் டி ஆர் (தங்கப்பந்து) விருதுக்கான இறுதிப்பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பார்சிலோனாவின் மெஸ்ஸி, நெய்மர் மற்றும் ரியல் மாட்ரிட்டின் ரொனால்டோ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஜனவரி 11ம் திகதி இந்த விருதுக்கான வீரர் அறிவிக்கப்படுவார்.
இந்த 3 பேர் பட்டியலில் இருந்து விருதுக்குரிய வீரரை கால்பந்து பத்திரிகையாளர்கள், தேசிய அணியின் பயிற்சியாளர்கள் வாக்கெடுக்கின் மூலம் தெரிவு செய்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.