
கணேமுல்ல சஞ்சீவ கொலை – பலரிடம் வாக்குமூலம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, அதிகாரிகள் உட்பட 15 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகளுடன் கணேமுல்ல சஞ்சீவவை நீதிமன்றத்திற்கு அழைத்து வருவதற்குப் பொறுப்பான அதிகாரி ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 15 பேரிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகள் உதவி சிறைச்சாலை அத்தியட்சகர் ஒருவரின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்படுகின்றன.