
600 மில்லியன் வருமானத்தை ஈட்டிய இ.பொ.ச
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பண்டிகைக் காலத்தின் மூன்று நாட்களிலும் இலங்கை போக்குவரத்து சபையின் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது.
அதன்படி, கடந்த 10, 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் மட்டும் 600 மில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளனர்.
இவ்வாறு இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர் டி.எச்.ஆர்.டி. சந்திரசிறி தெரிவித்தார்.