
புதிய தவிசாளராக இன்று தெரிவு செய்யப்பட்ட மஹ்திக்கு இம்றான் மஃரூப் எம்பி வாழ்த்து
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கிண்ணியா நகர சபையின் புதிய தவிசாளராக இன்று தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கெளரவ M.M. மஹ்தி அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதேபோன்று அவரை தவிசாளராக தெரிவு செய்வதற்கு வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், சிறீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.