
ரணிலுக்கு வந்த பல்கலைக்கழக அழைப்பு கடிதம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க ஆகியோருக்கு (wolverhampton) பல்கலைக்கழகத்தில் இருந்து விடுக்கப்பட்டிருந்த அழைப்பு கடிதத்தை ஐக்கிய தேசிய கட்சியின் ஊடக பிரிவு உத்தியோகப்பூர்வமாக வௌியிட்டுள்ளது.
எனவே, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச நிதியை தவறாகப் பயன்படுத்தவில்லை என்றும் அந்த கட்சியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தமது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள சென்று அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) முற்பகல் கைது செய்யப்பட்டார்.