கண்களால் கைது செய் படத்தில் பாரதிராஜா மூலம் தமிழில் அறிமுகமானவர் ப்ரியாமணி. பின்னர் தனுஷ், விஷால் என பல கதாநாயகர்களுடன் நடித்து வந்தவருக்கு பருத்தி வீரன் மூலம் தனது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அங்கிகாரம் பெற்றதுடன் 2007ம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை பெற்றார். பின்னர் தெலுங்கு, மலையாளம், கண்ணடம் என நடித்து வந்தவருக்கு தமிழில் மட்டும் சிறந்த படம் அமையவேயில்லை. தற்போது கண்ணடத்தில் முண்ணனி நடிகையாக நடித்து வரும் ப்ரியாமணி படம் ஒன்றை இயக்கவிருப்பதாக தகவலகள் வெளியாகியுள்ளது. நடிகர் சுதீப் தயாரிக்கவிருக்கும் இப்படம் தமிழ், கண்ணடம், மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகவிருக்கிறதாம். இப்படத்திற்க்கான் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடந்து வருகிறதாம்.
இயக்குனராக அவதாரமெடுக்கும் ப்ரியாமணி!