அமெரிக்காவின் தெற்கு விர்ஜினியாவின் புறநகர் பகுதியில் வசிக்கும் அக்குழந்தைக்கு வயது 2. படுக்கை அறையில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த அந்த 2 வயது குழந்தை மேசை மீதிருந்த துப்பாக்கி ஒன்றைக் கண்டெடுத்தது.
ஆர்வத்தோடு அந்த துப்பாக்கியை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக அவனது விரல் துப்பாக்கி விசையை அழுத்த துப்பாக்கி குண்டு அந்த குழந்தையின் தலையை துளைத்துச்சென்றது.
சத்தம் கேட்டு அலறியடித்து ஓடி வந்த சிறுவனின் பெற்றோர் அவனை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுவன், தலையில் ஏற்பட்ட பயங்கர காயம் காரணமாக நேற்று பரிதாபமாக உயிரிழந்தான்.