ஃபீலட் மார்ஷல் சரத் பொன்சேகா, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு சற்று முன்னர் சென்றுள்ளார். அவன்ட் காட் நிறுவனத்துக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யவே அவர் சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
அவன்ட் காட் நிறுவனத் தலைவர் நிஷங்க சேனாதிபதி, சரத் பொன் சேகாவுக்கு நிதி வழங்கியதாக தெரிவித்திருந்த நிலையில், பொன்சேகா அதை மறுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.