முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஜான்டி ரோட்ஸ் இலங்கை கிரிக்கெட் அணியின் குறுகிய கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் களத்தடுப்பு பயிற்சியாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடருக்காக இவரை இலங்கை அணி குறுகிய கால பயிற்சியாளராக இருக்கும் படி அனுகியது.
இவர் யூன் 4ம் திகதி வரை மட்டுமே பணியாற்றவுள்ளார். இந்த காலக்கட்டத்தில் இலங்கை தேசிய அணிக்கு மட்டுமல்லாது, உள்ளூர் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோர்களுக்கும் பயிற்சி வழங்க இருக்கின்றார்.
அடுத்த மாதம் இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான தொடரைத் தொடர்ந்து இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது