மகிந்த கைது! கசோலை மோசடி!

சுயதொழில் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் கொழும்பு மாநகரசபையின் உறுப்பினருமான மஹிந்த கஹந்தகம கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டத்தரணி ஒருவரின் 50000 ரூபா பெறுமதியான காசோலையை களவாடி பண எடுத்துக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கறுவாத்தோட்ட பொலிஸார் இன்று மஹிந்த கஹந்தகமவை கைது செய்துள்ளனர்.

மஹிந்த கஹந்தம சற்று நேரத்தில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்