மாவனல்லை ஜே.எம் மீடியா (JM MEDIA) ஊடக நிறுவனத்தின் ஏற்பாட்டில் தமிழ் பேசும் மக்களுக்கான இலவச ஒருநாள் ஊடகச் செயலமர்வு நேற்றைய முன்தினம் (03) மாவனல்லை முபாரிஸ் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இச்செயலமர்வுக்கு வளவாளர்களாக தேசிய புகழ் பெற்ற அறிவிப்பாளரும், அதிபருமான ஏ.ஆர்.எம். ஜிப்ரி, வசந்தம் எப்.எம் செய்திப்பிரிவு பொறுப்பாளர் அபாஸ் முஹம்மத், பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவில் பணியாற்றும் எம்.எஸ்.அமீர் ஹுசைன் மற்றும் பல ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து சுமார் 200க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் , சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், குறுந்திரைப்பட தயாரிப்பாளர்கள்,மாணவர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
இச்செயலமர்வின் இறுதியில் பங்குபற்றியோருக்கு சான்றிதல்கள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
https://www.facebook.com/JMmedia.lk







