விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

பிரதமரை விமர்சித்தமை தொடர்பில் விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதாவது கிரிக்கெட் நிறுவனத்தில் கண்காணிப்புக் குழுவை நியமிப்பது தொடர்பில் பிரதமர் ஆலோசனை வழங்கியமை தொடர்பிலேயே அமைச்சரால் பிரதமர் விமர்சிக்கப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளனர்.

எனவே இந்த விடயம் தொடர்பாகவே அமைச்சர் தயாசிறி மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளதாகவும் இதற்கு முதலும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தார் என்றும்,

பாராளுமன்றத்தில் கட்சியின் தலைவரை அவதூறாக பேசியதையும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.