ஏழு மாத சிசுவின் உயிருடன் விளையாடிய சார்ஜர்

ஏழு மாத சிசு ஒன்று மின்வழங்கியோடு இணைக்கப்பட்டிருந்த தொலைபேசி சார்ஜரின் வயரை வாயில் வைத்தமையால் பரிதாபகரமாக பலியான சம்பவம் திவுலப்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் திவுலப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று பிற்பகல் வேளையில் நடந்துள்ளது

மின்வழங்கியோடு இணைக்கப்பட்டிருந்த தொலைபேசி சார்ஜரின் வயரை வாயில் தவறுதலாக வைத்தமையால் குறித்த குழந்தைக்கு மின்சாரம் தாக்கியுள்ளது.

குறித்த குழந்தையின் தாய் சிசுவின் வாயிலிருந்து வயரை எடுத்து நேற்று பிற்பகல் குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

எனினும், சிகிச்சை பயனளிக்காமல் அந்த சிசுவை காப்பற்ற முடியவில்லை என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.