கடந்த பொதுத்தேர்தலின் போது நுவன் தரங்க என்பவர் மீது கம்பஹா நீதிமன்ற கட்டடத்துக்கு முன்பாக வைத்து தாக்குதல் நடத்தினார் என்று குற்றச்சாட்டப்பட்டிருந்த முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தன உள்ளிட்ட நால்வர், அந்த குற்றச்சாட்டு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் குறித்த வழக்கு, கம்பஹா பிரதான நீதவான் காவிந்தியா நாணயக்காரவின் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சரண குணவர்தன உள்ளிட்ட அந்த நால்வரும் இவ்வாறு விடுவிக்கப்பட்டனர்.