ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒற்றுமையை உறுதிப்படுத்த ஐ.தே.கட்சியை விவாகரத்து செய்ய வேண்டும் – வாசு

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒற்றுமையை உறுதிப்படுத்துவதற்காக, ஐக்கிய தேசியக் கட்சியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விவாகரத்துச் செய்யவேண்டும் என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரும் அமைச்சருமான எஸ்.பி. திஸாநாயக்க, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை ஒற்றுமைப்படுத்த முயல்வதாகத் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒற்றுமையை உறுதிப்படுத்த, ஐக்கிய தேசியக் கட்சியுடனான தொடர்புகளை, ஜனாதிபதி துண்டிக்கவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.