வெளிநாட்டு தூதரகங்களில் பதவி வெற்றிடங்கள் நிலவுவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த வருடத்தில் 25 அதிகாரிகளுக்கு நியமனங்கள் வழங்கியதாக வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ச டீ சில்வா தெரிவித்துள்ளார். எனினும் பல வெற்றிடங்கள் காணப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வருடத்திலும் மேலும் 25 அதிகாரிகளை பணிக்கமர்த்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
வெளிநாட்டு தூதரகங்களில் பணிபுரிவதற்காக நடத்தப்படும் பரீட்சைகளில் சித்தியடைந்தவர்களுக்கே புதிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ச டீ சில்வா தெரிவித்துள்ளார்.